பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையாநகரில் பல இடங்களில் பெயர் பலகை இருந்தும், அதில் ஊர்களின் பெயர் அழிந்துவிட்டது. இதனாால் புதிதாக அப்பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் ஊர்பெயர் தெரியாமல் வெகுதூரம் சுற்றித்திரியும் நிலை உள்ளது. எனவே அழிந்த பெயர் பலகை அனைத்தையும், புதிதாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.