மூடப்படாத கிணறு

Update: 2023-01-04 17:33 GMT

பவானியை அடுத்த மயிலம்பாடி கிராமம் சாணார்பாளையம் காலனியில் ஓம்காளியம்மன் கோவில் அருகே 50 அடி ஆழமுடைய பொதுக்கிணறு உள்ளது. முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் இந்த கிணற்றின் மேல் கம்பி வலை அமைக்கப்படவில்லை. அதன் அருகே விளையாடும் சிறுவர்-சிறுமிகள் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. உடனே அந்த கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்