பன்றிகள் தொல்லை

Update: 2023-01-01 14:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பாஸ்கரபுரம் பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கூட்டம், கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்