கடலூர் பச்சையாங்குப்பத்தில் உள்ள இரட்டை ரோடு, கொய்யா தோப்பு பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.