இருக்கைகள் சேதம்

Update: 2022-12-21 11:21 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக இருக்கை வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த பஸ்நிறுத்தத்தில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களுக்கு பஸ் மூலம் சென்று வருகின்றனர். தற்போது இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து உள்ளது. மேலும் அங்கிருந்த கைபிடிகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்