மயிலாடுதுறை மாவட்டம் 35 மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கென தனியாக கட்டிடம் இல்லை. பல ஆண்டுகளாக அருகில் உள்ள நூலகத்தில் இயங்கி வருகிறது. இதனால் நூலகத்திற்கு அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக நூலகத்தில் படிக்க வரும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய ஊராட்சி தலைவர் கட்டிடம் கட்ட வேண்டும்.