ஆபத்தான குழி

Update: 2022-12-14 05:10 GMT

பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் அருகில் 2 இடங்களில் பெரிய குழிகள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த குழியில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் இந்த ரோடு வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவில் வாகனங்களில் செல்லும் சிலர் குழி இருப்பது தெரியாமல், வாகனங்களை அதில் இறக்கி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்