ஆபத்தான நிழற்குடை

Update: 2022-11-30 14:57 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பூலாங்கால் பஸ்நிறுத்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் அபாயமான நிலையில் வெளியே தெரிகிறது. இதனால் இதனை பயன்படுத்த பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்