கம்பி வலை அமைக்கப்படுமா?

Update: 2022-11-30 12:28 GMT

அம்மாபேட்டை சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சுமார் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் சுமார் 5 அடிக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில் திறந்தபடி கிடக்கிறது. அந்த பகுதியில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி வருகின்றனர். அவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உள்ளது. பேராபத்து ஏற்படும் முன்பு உடனே கிணற்றின் மேல் கம்பி வலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்