நடைபாதையில் வாகனங்கள்

Update: 2022-11-27 10:44 GMT

கோத்தகிரி காந்தி மைதானத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் சாலையில் ஒருபுறம் கனரக வாகனங்களும், எதிர்ப்புறம் பழைய நூலகம் முன்பு நடைபாதையில் இலகுரக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆபத்தான வகையில் விபத்து அபாயத்துடன் சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்