மயிலாடுதுறை மாவட்டம் கடக்கம் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப்பகுதியில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் இவை சாலையில் செல்லும் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். மேலும் வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.