சேதமடைந்துள்ள நுழைவு வாயிலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-23 14:27 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொக்கூர் ஊராட்சி நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்த நுழைவு வாயில் சேதமடைந்து காணப்படுகிறது. அதில் உள்ள சிமெண்டுகாரைகள் பெயர்ந்து கம்பிகள் காணப்படுகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலையில் ஆபத்தான வகையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்படும் கொக்கூர் ஊராட்சியின் நுழைவு வாயிலை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்