கிராமநிர்வாக அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-23 13:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் அன்னவாசல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடத்தின் மூலம் அந்த பகுதி மக்கள் பல்வேறு சான்றிதழ்களை பெற்று வந்தனர். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சுவரில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த கட்டிடத்திற்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்