தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-23 09:05 GMT

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 2-வது வார்டு வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்(2) மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லவே முடியவில்லை. மேலும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்