கோத்தகிரி தாசில்தார் அலுவலகம், நகரின் முக்கிய பகுதியில் 3 தளங்களுடன் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் முறையாக பராமரிப்பின்றி காணப்படுவதுடன், வெளிப்புற சுவர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் பலத்த மழை பெய்யும்போது, அவை இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே அந்த கட்டிடத்தை பராமரிக்க பொதுப்பணி துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.