விபத்து அபாயம்

Update: 2022-11-06 16:11 GMT

கிணத்துக்கடவு ஒன்றியம் கப்பளாங்கரை கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறுக்களந்தை செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. மேலும் காங்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்