பரங்கிப்பேட்டை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் தனியாக நடந்து செல்லும் பொதுமக்களை துரத்திச் சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.