மரம் வெட்டப்பட்டது

Update: 2022-10-23 06:43 GMT


கீழ்குளம் சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தேங்காப்பட்டணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மாமரம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சாய்ந்த நிலையில் காணப்பட்ட மாமரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்