சேதமடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2022-10-19 15:48 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வகுப்பறையின் உள்ளே கசிந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சேதமடைந்த கட்டிடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்