தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-19 14:24 GMT
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் ஒத்தக்கடை பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அவை அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. மேலும் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு திடீரென ஓட்டம் பிடிக்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்