மழைநீர் தேங்குவதால் அவதி

Update: 2022-10-19 14:03 GMT

கோத்தகிரி மிளிதேன் கிராமத்தில் இருந்து எரிசிபெட்டா செல்லும் சாலையில் மழைநீர் வழிந்தோடும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியுடன் சென்று வருகின்றனர். மேலும் பாதசாரிகளும் தவறி விழும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். இது தவிர கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே கால்வாய் அடைப்பை அகற்றி மழைநீர் வழிந்தோட உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்