மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நாயுடு தெற்கு தெருவில் பனை மரத்தில் கதண்டுகள் உள்ளன. இவை அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை அவ்வபோது கடித்து விடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, கதண்டுகளால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கதண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுப்பார்களா?