கோத்தகிரி மிளிதேன் கிராமத்தில் இருந்து எரிசிபெட்டா செல்லும் சாலையில் மழைநீர் வழிந்தோடும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பாதசாரிகள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே கால்வாய் அடைப்பை அகற்றி மழைநீர் வழிந்தோட நடடிக்கை எடுக்க வேண்டும்.