கோத்தகிரி கடைவீதி, ரோஸ்காட்டேஜ் குடியிருப்புப்பகுதியில் 1996 ஆம் ஆண்டு கழிவுநீர் கால்வாயுடன் நடைபாதை அமைக்கப்பட்டது. இங்குள்ள குடியிருப்புவாசிகள் சிலர் கால்வாயை மூடி விட்டதால் கழிவு நீர் மற்றும் மழை நீர் வழிந்தோடி செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இவ்வழியாக நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.