சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-10-10 16:15 GMT

பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளியாகாளை பகுதியில் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அச்சத்துடனேயே நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், வெள்ளியாகாளை.

மேலும் செய்திகள்