சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்குளம் வடக்குதெரு, மேலத்தெரு, தெற்குதெரு, காலனி ஆகிய பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். வாகனஓட்டிகளுக்கு நாய்களால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.