மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பனந்தோப்புதெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?