தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-09-28 15:50 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சில நாய்கள் நோயுற்று சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்