சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பணக்குடியில் கால்நடை மருத்துவமனை கிடையாது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் பலகிலோ மீட்டர் தூரம் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.