குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-09-25 14:05 GMT

கோத்தகிரி காந்தி மைதான புயல் நிவாரண கூட கட்டிடத்தில் ஏராளமான குரங்குகள் முகாமிட்டுள்ளன. இவை கட்டிடத்தின் மேற்கூரைகளை சேதப்படுத்தி வருவதுடன், மார்க்கெட் கடைகளில் புகுந்து காய்கறிகள் உள்பட உணவு பொருட்களை தின்று நாசம் செய்து வருகின்றன. இதனால் அட்டகாசம் செய்து வரும் அந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்