மாணவ-மாணவிகளுக்கு ஏமாற்றம்

Update: 2022-09-25 12:04 GMT

கரூர் மாவட்டம் புகழூரில் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் வெளிப்புறத்தில் நோட்டுகள் மற்றும் பேப்பர்கட்டுகள் நேரடி விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நோட்டுகள், பேப்பர்கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்துவிட்டு எப்பொழுது சென்று கேட்டாலும் எந்த ஒரு நோட்டும், பேப்பரும் இல்லை என்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனம் தமிழநாடு காகித ஆலை நிறுவனம் எனக்கூறி வரும் இந்த நிலையில் இதுபோல செயல்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு பேப்பர்கள், நோட்டுகள் இல்லை என்று சொல்லி வருவது அவர்களுடைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களுக்காக செயல்படும் இதுபோன்ற இடங்களில் அனைத்தும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்