செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-09-25 12:00 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள ஒரம்புப்பாளையம் பகுதியிலிருந்து கவுண்டன்புதூர், சேமங்கிசெல்வநகர் வழியாக முத்தனூர் வரை விவசாயநிலங்களில் பாய்ச்சப்படும் தண்ணீர் வெளியேறி செல்லும் வகையில் உபரிநீர் கால்வாய் வெட்டப்பட்டது. அந்த கால்வாய் மூலம் உபரி நீர் சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உபரி நீர் கால்வாயில் நெடுகிலும் ஏராளமான செடி, கொடிகள், சம்புகள் முளைத்து கால்வாயில் தங்குதடையின்றி உபரிநீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உபரிநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்