விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-23 15:50 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் வழியாக அரியலூர் முத்துவாஞ்சேரி செல்லும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வி.கைகாட்டி மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள சுவற்றில் பல்வேறு வகையான விளம்பர பாதாகைகள் ஒட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழும் சூழல் உள்ளது. மேலும் சாலையோரங்களில் நின்று கொண்டு கால்நடைகள் பதாகைகளை தின்று விடுகிறது. இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்