வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்

Update: 2022-09-22 13:59 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை சபாபதி நாடார் தெரு பகுதியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே செல்லும் தென்கரை வாய்க்காலில் பொதுமக்கள் துணிகளை துவைத்து குளிக்கும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த படிக்கட்டு பகுதியில் வாய்க்கால் தண்ணீரில் அதிக அளவிலான செடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக இங்கு பொதுமக்கள் குளிக்க முடியாதநிலை உள்ளது. எனவே இந்த செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்