வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2022-09-21 14:27 GMT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வடிகால் சீரமைக்கும் பணிகள் மற்றும் புதிதாக வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கரூர் தாந்தோணி மலையில் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மேற்கண்ட பணிகள் ஆமை வேகத்தில் மெதுவாக நடைபெற்று வருவதால் இதற்கு எதிரே உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படி வடிகால் அமைக்கும் பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்