எரியாத மின் விளக்குகள்

Update: 2022-09-20 15:05 GMT

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புகழூர் காகித ஆலை நிறுவனம் சார்பில் பழைய பாலத்திற்கு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட மின்விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்த நிலையில் பல மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த எரியாத மின்விளக்குகளை மாற்றி மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்