சேதமடைந்த சிமெண்டு பலகைகள் மாற்றப்படுமா?

Update: 2022-09-18 13:43 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ஆண்டார் மெயின் ரோடு தெருவில் இருந்து காங்கிரஸ் ரோடு தெருவிற்கு செல்லும் முகப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடையின் மேல் பகுதி சிமெண்டு பலகை மற்றும் கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்தது. இதன் வழியாக பொதுமக்கள் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் சென்று வந்தனர். இந்தநிலையில் சாக்கடையின் மேல் போடப்பட்டிருந்த காங்கிரீட் சிமெண்டு பலகையின் ஒரு பகுதி உடைந்து விட்டது. இந்த சிமெண்டிலான பலகை முழுமையாக உடையும் முன்பு, சேதம் அடைந்துள்ள இதை முழுமையாக அகற்றி புதிய சிமெண்டு பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்