கழிவுகளால் மாசடையும் தண்ணீர்

Update: 2022-09-18 13:27 GMT

கரூர் மாவட்டம், பாலத்துறை அருகே உள்ள புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் ஓரத்தில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு வகையான கடைக்காரர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு வருகின்றனர். அதேபோல் இந்த வழியாக இறந்தவர்களை கொண்டு செல்லும்போது இறந்தவர்களின் தலையணைகள், மெத்தைகள், துணிமணிகள் மற்றும் இறந்த வீட்டில் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்த தென்னை மட்டைகள், செருப்புகள் என ஏராளமான பொருட்களை புகழூர் வாய்க்காலையொட்டி போட்டுச்செல்கின்றனர். காற்று, மழை அடிக்கடி பெய்து வருவதால் வாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள கழிவுகள் வாய்க்காலுக்குள் விழுந்து தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. அதேபோல் வாய்க்கால் தண்ணீரை குடிக்கும் கால்நடைகளின் வாய்க்குள் பிளாஸ்டிக் கழிவுகள் சென்று கால்நடைகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்