சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-09-13 12:48 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை நகர பகுதியில் ஆடு, மாடுகள் நகரப் பகுதியில் முக்கிய சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுபோல பிரதான சாலைகளின் நடுவிலும், சாலை ஓரங்களிலும் ஆடு, மாடுகள் படுத்து கிடப்பதால் வாகனங்கள் ஆடு, மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. அதுபோல விபத்து ஏற்பட்டால் ஆடு, மாடுகள் உயிரிழப்பதோடு வாகனத்தில் வருபவர்களுக்கும் உயிரழப்பு ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. மேலும் மளிகை, காய்கறி உள்ளிட்ட சாலையோர கடைகளில் உள்ள பொருட்களை மாடுகள் உண்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்