கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய்கள் சுற்றி வருகிறது. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி செல்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களின் முன் பகுதியில் வந்து விழுகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.