திட்டக்குடி தாலுகா கோழியூர் கிராமம் 7வது வார்டில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் புதர், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன். இதனால் பாம்புகள், தேள் போன்ற விஷப்பூச்சிகள் அதிக அளவில் நடமாடுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்குள்ள புதர், செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.