விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கீழ ரத வீதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தால் கழிவுநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.