புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை மின்கட்டணம் மற்றும் பயன்பாட்டு விவரங்கள் மின் அட்டையில் எழுதப்பட்டு வந்த நிலையில், தற்போது செல்போனுக்கு வரும் குறுந்தகவலில் முழுமையான விவரங்கள் இடம்பெறுவது இல்லை. இதனால் எத்தனை யூனிட் பயன்பாடு, இலவச யூனிட் போக செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை அறிய முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வழக்கம்போல் மின் அட்டையில் விவரங்களை எழுதுவதோடு, குறுந்தகவலில் மின்சார பயன்பாடு மற்றும் கட்டண விவரங்களை முழுமையாக தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.