பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே பைபாஸ் சாலையை கடந்து செல்லும் வகையில் அணுகு சாலை மற்றும் தரை மட்ட பாலம் அமைக்கப்பட்டு பாலத்திற்கு கீழ் கரூர் செல்லும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்த அணுகு சாலை மற்றும் பாலத்தில்மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் இரவில் செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே அப்பகுதியில் போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.