மின்கம்பத்தில் செடி,கொடிகள் ஆக்கிரமிப்பு

Update: 2024-07-07 17:00 GMT

மின்கம்பத்தில் செடி,கொடிகள் ஆக்கிரமிப்பு

சேவூர் குலாலர் வீதி பகுதியில், வீரமாத்தி அம்மன் கோவில் அருகே சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் செடிகள், கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் அப்பகுதியிலேயே மின்கம்பத்தின் அருகில் குடிநீர் குழாயும் உள்ளது. செடி,கொடிகள் மின்கம்பத்தை சுற்றி உள்ளதால் மின்சாரம் பாயுமோ என பயந்து பெண்கள் குடிநீர் பிடிக்க தயங்குகிறார்கள். எனவே உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்தில் உள்ள செடி,கொடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோவிந்தசாமி,சேவூர்.

98768 65253

மேலும் செய்திகள்