புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-09-20 15:20 GMT
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வடக்கு அய்யனூர் தெருவில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து அரித்து சாய்ந்த நிலையில் உள்ளதாக பாலா என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்