தொடர் மின் வெட்டு

Update: 2023-09-13 11:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூர் கிராமத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மின்வெட்டு விட்டு விட்டு நடைபெறுகிறது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் மின்சார அளவு அதிகமாகவும், திடீரென குறைந்தும் மாறி மாறி வருகிறது. இதனால் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்