எரியாத உயர்கோபுர மின் விளக்கு

Update: 2023-06-18 11:56 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தில் அதிக மக்கள் கூடும் இடமான மளிகை கடைகள் அடங்கிய தெருவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக இந்த கோபுரத்தின் மின் விளக்கு எரியவில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதால் இந்த இரவு நேரத்தில் இந்த வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்