ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-11-16 11:42 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சி, மேல சுக்காம்பட்டியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு நீரேற்றும் ஆழ்துளை கிணற்று மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில், மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்