தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2022-10-12 13:39 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் இனுங்கூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்